சாவகச்சேரி பங்கிற்குட்பட்ட நாவற்குழி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள புனித அற்புத அன்னை ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புரட்டாதி மாதம் 08ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.