நவாலி புனித பேதுரு, பவுல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 28ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
அத்துடன் நவாலி புனித பேதுரு, பவுல் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மடுமாதா திருவிழா 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை அருட்தந்தை உடுவில் மல்வம் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.