நவாலி பங்கில் உருவாக்கப்பட்ட புதிய அருட்பணி பேரவை அங்கத்தவர்களுக்கான கருத்தமர்வும் ஒன்றுகூடலும் 10ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை மாதகல் புனித லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது.
நவாலி பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாதகல் பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் சில்லாலை பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களால் மறைமாவட்ட அருட்பணி பேரவை யாப்பின் அடிப்படையில் கருத்துரையும் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாசன் அவர்களால் அருட்பணி பேரவை மற்றும் பொதுநிலையினரின் பணிகள் பற்றிய கருத்துரையும் இடம்பெற்றன.
தொடர்ந்து அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் 24 அருட்பணி பேரவை அங்கத்தவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.