மணற்காடு பங்கின் நடுக்குடத்தனை புனித வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 8ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
01ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 7ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை ஆலோசியஸ் அன்ரோ டெனிசியஸ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.