கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தரம் 04 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களுக்கு மறைமாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட தேசியமட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்டத்தில் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட மகாவித்தியாலயம், இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, கிளிநொச்சி புனித திரேசாள் மகாவித்தியாலயம், முல்லைத்தீவு மகாவித்தியாலயம் ஆகிய 05 நிலையங்களில் நடைபெற்ற இப்பரீட்சையில் மறைமாவட்ட பரீட்சையில் சிறந்த சித்திபெற்ற 1000 ற்கும் அதிகமான மாணவர்கள் தோற்றியிருந்தனர்.