யாழ்ப்பாணம் தையிட்டி பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையை அகற்ற கோரியும், திஸ்ஸ விகாரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் தை மாதம் 03ஆம் சனிக்கிழமை நடைபெற்றது.
“அதிகாரத்திற்கும் அடக்கு முறைக்கும் எதிரான ஒலி” என்னும் கருப்பொருளில் திஸ்ஸ விகாரை முன்றலில் இடம்பெற்ற இப்போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகள், மதத்தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

