யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த திருமண பந்தந்தில் இணைந்து 50ஆண்டுகளை நிறைவுசெய்த தம்பதிகளுக்கான சிறப்பு நிகழ்வு 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
யாழ் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிகாட்டலில் அருட்தந்தை கஜீஸ்காந்த் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பேராலய வளாகத்தில் மன்னிப்பு வழிபாடு இடம்பெற்றது.
தொடர்ந்து தம்பதிகள் யூபிலி கதவின் ஊடாக பேராலயத்திற்குள் நுழைந்து அங்கு இடம்பெற்ற நற்கருணை வழிபாட்டில் பங்குபற்றி யூபிலி சிலுவையை வணங்கினார். நற்கருணை வழிபாட்டை அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.
தொடர்ந்து பேராலய மண்டபத்தில் தம்பதியினருக்கான கௌரவிப்பும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துசிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 19 தம்பதிகள் பங்குபற்றியிருந்தனர்.