தவக்காலத்தை முன்னிட்டு திருகோணமலை மறைமாவட்டம் இருதயபுரம் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
அத்துடன் அருட்தந்தை நிதிதாசன் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு அன்பொளிபுரம் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வும் பங்குத்தந்தை அருட்தந்தை ஜொனத்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்இரத்ததான நிகழ்வுகளில் குருதிக்கொடையாளர்கள் பலரும் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

