போலந்து நாட்டிலிருந்து திருகோணமலை மறைமாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட புனித பவுஸ்தீனாவின் முதல்நிலை திருப்பண்டம் மக்களின் வணக்கத்திற்காக திருகோணமலை இறைஇரக்க திருத்தலத்தில் வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு சித்திரை மாதம் 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் திருப்பண்டத்தை நிரந்தரமாக ஆலயத்தில் வைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin