தாளையடி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 13ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
4ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண நிதி முகாமையாளர் அருட்தந்தை கமலாநந்தன்; அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை பளை பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ச் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
அத்துடன் திருநாளை சிறப்பித்து அன்றைய தினம் மாலை விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.