தர்மபுரம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் தலைமையிலான குழுவினர் கலந்து விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள், கருத்துரைகள் என்பவற்றின் ஊடாக கருத்தமர்வை வழிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 80 மறைக்கல்வி மாணவர்களும் 16 மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin