யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியின் தனிநாயகம் தமிழ் மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்தூது தனிநாயகம் அடிகள் நினைவுப்பேருரை 28ஆம் திகதி கடந்த புதன்கிழமை கல்லூரியின் ஜோய் கிறிஸோஸ்தம் மண்டபத்தில் நடைபெற்றது.

மன்ற காப்பாளர் அருட்தந்தை குயின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை செபமாலை அன்புராசா அவர்கள் கலந்து “நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் மேலான வாழ்வும் பரந்து விரிந்த பணிகளும்” என்னும் தலைப்பில் நினைவுப்பேருரை வழங்கினார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், குருமட மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin