டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட மன்னார் முருங்கன் பிரதேச மாணவர்களுக்கு யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பங்குமக்கள் ஒரு தொகுதி உதவிகளை வழங்கியுள்ளனர்.

சுண்டுக்குளி பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மார்கழி மாதம் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பங்குத்தந்தை தலைமையிலான குழுவினர் மன்னார் மறைமாவட்டம் முருங்கன் கட்டை அடம்பன் றோ.க.த வித்தியாலயத்தை தரிசித்து அங்கு புயலால் பாதிக்கப்பட்ட 268 மாணவர்களுக்கு 275,000 ரூபாய் பெறுமதியான பாடசாலை சீருடைகளை வழங்கியுள்ளனர்.

By admin