பதுளை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய குருவுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலி ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை பண்டாரவளை புனித அந்தோனியார் திருத்தலத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் திருத்தொண்டரான சொலமன் ஜவன் ரொட்றிக்கோ அவர்கள் புதிய குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார்.

புதிய குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் அர்ப்பணிப்புடன் பணிவாழ்வில் நிலைத்திருந்து இறைபணியாற்ற நல்வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றோம்.

By admin