உருத்திரபுரம் பங்கின் செல்வநகர் புனித அமைதியின் அரசி ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை வட்டக்கச்சி பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin