செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
17ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அச்சுவேலி பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.