சுவிஸ் நாட்டின் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் முன்னெடுத்த புனித லூர்து அன்னை திருவிழா, பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

24ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணை புகழ் மாலை வழிபாடும் தொடர்ந்து 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருவிழா திருப்பலியும் இடம்பெற்றன.

திருவிழா திருப்பலியை ஐக்கிய இராட்சியம் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள அமதிகளின் பங்குத்தளமான புனித சூசையப்பர் தேவாலய பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை விமல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் இறுதி ஆசீரை குருநாகல் மறைமாவட்ட ஆயரும் இலங்கை ஆயர் பேரவை தலைவருமான பேரருட்தந்தை ஹெரல்ட் அன்ரனி பெரேரா அவர்களும் வழங்கினார்.

By admin