சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய அன்னையர் மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட மன்ற பாதுகாவலி புனித கார்மேல் அன்னை திருவிழா யூலை மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை திருப்பலியும், அன்னையின் திருச்சொருப ஆசீரும் அன்னையர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.
இவ் ஒன்றுகூடல் நிகழ்வில் திருமண பந்தத்தில் இணைந்து ஐம்பது மற்றும் 25 வருடங்களை நிறைவுசெய்த தம்பதிகள் மற்றும் கடந்த ஒருவருடத்தில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கான கௌரவிப்புக்களும் தோழமை விருந்தும் நடைபெற்றதுடன் அன்று மாலை அன்னையர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.