உயிர்த்த ஆண்டவர் சமூகத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்டம் சீனக்குடா வெள்ளமணல் தூய ஆவியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை கிளறேசியன் சபை அருட்தந்தை தேவசீலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உயிர்த்த ஆண்டவர் சமூக நிறுவுனர் திரு. லலித் பெரேரா அவர்களின் தலைமையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற இத்திருவிழிப்பு ஆராதனையில் புகழ்ச்சி, இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை என்பன இடம்பெற்றன.
ஆராதனை நிறைவில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் தூய அவியார் பெருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.