தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு சில்லாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை யூன் மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை சில்லாலை கதிரை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்ஆராதனை அன்று மாலை திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி 08ஆம் திகதி அதிகாலை நடைபெற்ற திருவிழா திருப்பலியுடன் நிறைவடைந்தது.

அத்துடன் 10ஆம் திகதி மறைக்கல்வி மாணவர்களுக்கான முழுநிலா ஒன்றுகூடலும் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

செம்முகம் ஆற்றுகை குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள், கருத்துரைகள் என்பன இடம்பெற்றதுடன் 83 வரையான மாணவர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

By admin