சில்லாலைப்பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் புரட்டாதி மாதம்; 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித கதிரைமாதா ஆலய டெய்சி மண்டபத்தில் நடைபெற்றது.
“உதிரம் கொடுப்போம் உயிர்களை காப்போம்” எனும் தொனிப்பொருளில் பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்இரத்ததான முகாமில் 35 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.