மன்னார் மறைமாவட்டம் சிப்பியாறு புனித அந்தோனியார் திருத்தல வருடாந்த திருவிழா பரிபாலகர் அருட்தந்தை லோறன்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்ததுடன் இத்திருப்பலியில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மறைமாவட்டங்களிலிருந்து ஏராளமான இறைமக்கள் கலந்துசெபித்தனர்.

By admin