பிரான்ஸ் நாட்டின் இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் முன்னெடுத்த சார்ட் திருத்தலம் நோக்கிய 30ஆவது திருயாத்திரை, பணியக இயக்குனர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை போல் மத்தீயூஸ் மதன்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிரான்ஸ் நாட்டின் 18 பணித்தளங்கள் இணைந்து முன்னெடுத்து இத்திருயாத்திரை ஆன்மீக நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து சிறப்பித்து அன்னையின் திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலி நிறைவில் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் இத்திருப்பலியில் பிரான்ஸ் நாட்டின் பல இடங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

அத்துடன் பணியக பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும் கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை கொங்கூர் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 96 பிள்ளைகள் உறுதிப்பூசுதல் அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

 

By admin