இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சாரணர் செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த வாரம் கம்பஹா திருச்சிலுவை கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் றொமிலன் அவர்கள் இலங்கையின் சாரணர் பிரிவின் உயர் சாரணர் விருதான 2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி சாரணர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவ்விருதை இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்கள் சார்பாக தொழிலாளர் அமைச்சின் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க அவர்கள் வழங்கிவைத்தார்.