கோப்பாய் புனித மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
22ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அமலரித்தியாகிகள் சபை அருட்தந்தை போல் நட்சத்திரம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.