யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கரோல் வழிபாடு மார்கழி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்லூரி ஜோய் கிறிசோஸ்தம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்டத்தில் பணியாற்றும் துறவற சபைகளை சேர்ந்த அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் அருட்சகோதரர்கள் இணைந்து கிறிஸ்மஸ் கரோல் கீதங்களை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் கிளறேசியன் சபை அருட்தந்தை அருள்ராஜ் அவர்கள் கலந்து அருளுரையாற்றியதுடன் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் இறுதி ஆசீரையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin