காலி மறைமாவட்டம் பரவகும்புக திருக்குடும்ப ஆலய வளாகத்தில் கிளரேசிய அருட்தந்தையர்களால் அமைக்கப்பட்ட கிளாரட் சர்வதேச கல்லூரி திறப்புவிழா மாசி மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து பாடசாலையை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை கிளரேசிய சபை பிராந்திய முதல்வர் அருட்தந்தை யோசப் ஜெயசீலன், அவரின் ஆலோசகர் குழுவினர், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin