இலங்கையின் கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மறைமாவட்டங்களில் இயங்கிவரும் புனித யோசப்வாஸ் இறையியல் கல்லூரிகளில் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற கிறிஸ்தவ கற்கைநெறி உயர்கல்வி டிப்ளோமா பட்டப்படிப்பு இறுதிப் பரீட்சைக்கு தோற்றி சித்திபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு அக்குவைனஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
புனித யோசேவ்வாஸ் கல்லூரியின் மறைமாவட்ட நிலையங்களில் இருந்து 87 மாணவர்கள் தோற்றிய இப்பரீட்சையில் மன்னார் மறைமாவட்டத்திலிருந்து 18 மாணவர்களும் யாழ் மறைமாவட்டத்திலிருந்து 18 மாணவர்களும் கொழும்பு மறைமாவட்டத்திலிருந்து 13 மாணவர்களும் மட்டக்களப்பு மறைமாவட்டத்திலிருந்து 7 மாணவர்களும் உட்பட 56மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டனர்.
இப்பரீட்சையின் முதல் 6 உயர் நிலைகளையும் மன்னார் மறைமாவட்ட மாணவர்கள் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.