இலங்கை கல்வித்துறையின் உயர் நிலையான, கல்வி நிர்வாக சேவையின் 2023ஆண்டு போட்டிப் பரீட்சையிலும் நேர்முக தேர்விலும் வெற்றிபெற்று கல்வி நிர்வாக சேவைக்குள் உள்ளவாங்கப்பட்டவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு புரட்டாதி மாதம் 01ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.

கொழும்பு கல்வியமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசியரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட தெரிவில் 405 பேர் நியமனங்களை பெற்றுக்கொண்டதுடன் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை லெபோன் சுதன் அவர்களும் நியமனம் பெற்றுக்கொண்டார்.

அருட்தந்தை லெபோன் சுதன் அவர்கள் தற்போது பெரிய பண்டிவிரிச்சான் மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராக பணியாற்றிவருவதுடன் கடந்த காலங்களில் புனித பத்திரிசியார் கல்லூரியில் கனிஸ்ட இடைநிலை பிரிவு தலைவராகவும் முல்லைத்தீவு மாங்குளம் மகாவித்தியாலயம், மன்னார் தேவன்பிட்டி மகாவித்தியாலயம், மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய கல்லூரி ஆகியவற்றில் பிரதி அதிபராகவும் பணியாற்றியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin