கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் சமாதான சமூகத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் இளையோர், சிறுவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வுச் கருத்தமர்வு கடந்த மே மாதம் 30, 31 ஆம் திகதிகளில் பரந்தன், சிவபுரம் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளராக திரு. நந்தகுமார் அவர்கள் கலந்து தனிநபர் சமாதானம் குடும்ப சமாதானம் அதன் ஊடாக சமூகத்தில் சமாதானத்தின் பிரதிபலிப்பு தொடர்பான விடையங்களை உள்ளடக்கி கருத்தமர்வை நடாத்தினார்.
தொடர்ந்து முரண்பாடுகளற்ற சமூகத்தோற்றமே வன்முறைகளற்ற சமாதானம் மிக்க சமூகசூழலுக்கு வழி வகுக்கும் என்பது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 80ற்கும் அதிகமான இளையோர் மற்றும் சிறுவர்கள் கலந்து பயனடைந்தனர்.