கரவெட்டி பங்கு இளையோருக்கான தவக்கால தியானமும், கருத்தமர்வும் பங்குனி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளரீசியன் சபை அருட்தந்தை அருள்ராஜா மற்றும் அவரது குழுவினர் இணைந்து தியானத்தை நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 40 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin