கந்தரோடை புனித ரோஜா மாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

23ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை அமலமதித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்புராசா அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை நற்கருணைநாதர் சபை அருட்தந்தை சந்தான அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin