மிருசுவில் கச்சாய் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித செபமாலை அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழா ஆவணி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை S.J.Q. ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் ஆலய நூற்றாண்டு விழாவை சிறப்பித்து நூற்றாண்டு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
இவ்வாலயத்திற்கான அடிக்கல் 2022ஆம் ஆண்டு ஜப்பசி மாதம் 07ஆம் திகதி முன்னைநாள் பங்குத்தந்தை அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் காலத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களால் நாட்டிவைக்கப்பட்டு தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை S.J.Q.ஜெயரஞ்சன் அவர்களின் காலத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.