சுன்னாகம் பங்கின் ஏழாலை புனித இசிதோர் முன்பள்ளி விளையாட்டுப்போட்டி 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

முன்பள்ளி காப்பாளர் அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில், இருதய மருத்துவ நிபுணர் திரு. லிமலநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் இலங்கை வங்கி மல்லாகம் கிளை முகாமையாளர் திரு. அருணகிரிநாதன் திலீபன், ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலை அதிபர் திருமதி. சந்திரலதா கனேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் உடுவில் கோட்ட முன்பள்ளி இணைப்பாளர் திருமதி. கார்த்திகா மோகன்ராஜ் மற்றும் ஓய்வுநிலை தபால் அதிபர் திரு. திருஞானம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

By admin