ஊர்காவற்துறை புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த மாதம் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அகவொளி குடும்பநல நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் திருநாளை முன்னிட்டு ஊர்காவற்துறை புனித யோசவ்வாஸ் இளையோர் ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட சித்திரம், பாடல், புனிதர்களின் வேடமேற்றல், கவிதை, கட்டுரை மற்றும் நவநாள் மறையுரைகளை மையப்படுத்திய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
