ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 13ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
04ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜீவேந்திரா போல் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை றமேஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
தொடர்ந்து திருவிழா அன்று மாலை புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் திருவிழாவை முன்னிட்டு ஊர்காவற்றுறை பங்கு புனித ஜோசவாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசல்களும் வழங்கிவைக்கப்பட்டன.