திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ரஜீவா சேவியர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் பீடப்பணியாளர்கள் அன்னை திரேசா இல்லத்தை தரிசித்து தவக்காலத்தில் பங்குமக்களிடம் சேகரித்த பொருட்களை அங்குள்ள வயோதிபர்களிடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் 14 பீடப்பணியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.