உருத்திரபுரம் பங்கு ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா யூன் மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனிசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 04 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி நற்கருணைவிழா திருப்பலியை சாவகச்சோரி பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களும் திருநாள் திருப்பலியை புனித சவேரியார் உயர் குருத்துவக்கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியை தொடர்ந்து புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.
அத்துடன் உருத்திரபுரம் பங்கின் எல்லா ஆலயங்களையும் சேர்ந்த பெற்றோர், இளையோர் மற்றும் மறைக்கல்வி மாணவர்கள் மறையாசிரியர்களை உள்ளடக்கி தனித்தனி பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்ட கருத்தரங்கு 10 திகதி செவ்வாய்கிழமை ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
அகவொளி நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்துமர்வுகளில் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன், அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை விஜயேந்திரன் ஆகியோருடன் இணைந்த குழுவினர் வழிப்படுத்தினர்.
பெற்றோர், இளையோர், மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களென வெவ்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இக்கருத்தமர்வில் உரைகள், விளையாட்டுக்கள், குழுச்செயற்பாடுகள் என்பன இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் 140 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.