மன்னார் மறைமாவட்ட இலுப்பைக்குளம் பங்கின் வேப்பங்குளம் கர்த்தர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட “உருகாதோ நெஞ்சம்” திருப்பாடுகளின் ஆற்றுகை பங்குத்தந்தை அருட்தந்தை நியூட்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அவர்களின் நெறியாள்கையில் 120 கலைஞர்களின் பங்குபற்றுதலோடு மேடையேற்றப்பட்ட இவ்வாற்றுகை நிறைவில் கல்லறை ஆண்டவர் திருச்சொருப ஆசந்தி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இறைமக்ககௌ பலரும் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.

By admin