உடுவில் – மல்வம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் மற்றும் குருமட மாணவர்கள் கலந்து கருத்துரைகள், பாடல், குழுச்செயற்பாடுகள் ஊடாக மறைக்கல்வி மாணவர்களை வழிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 200ற்கும் அதிகமான மறைக்கல்வி மாணவர்களும் 15 மறையாசிரியர்களும்; பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin