யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்கள், மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் இளையோருக்கான செயற்திட்டங்கள் தொடர்பான அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயிற்சி கடந்த மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்; நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோர் செயற்பாடுகள் தொடர்பான கருத்துரைகள், பங்கு தரிசிப்புக்கள், இளையோருடனான சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள், கலைநிகழ்வுகள், விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.