ஓவியம் வரைதல் ஊடாக இளையோரின் உணர்வுகளை அடையாளப்படுத்தி அவற்றை வழிப்படுத்தும் நோக்கில் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இளையோர் குழுக்களுக்கான சிறப்பு கருத்தமர்வு யூன் மாதம் 10ஆம் திகதி செவ்வாய்கிழமை கிளிநொச்சி சிவபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

“குடும்ப மைய அணுகுமுறை ஊடாக அமைதியான சமூகத்தை கட்டியெழுப்பும் செயற்றிட்டத்தின் கீழ் பரந்தன் சிவபுரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இளையோர் குழுவை உள்வாங்கி, நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஐPவன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மனநல மருத்துவ ஆலோசகர் திரு. அருமைத்துரை அவர்கள் வளவாளராக கலந்து இளையோரை வழிப்படுத்தினார்.

சித்திரம் மற்றும் ஆக்கச் செயற்பாடுகள் ஊடாக உணர்வுகளை வெளிப்படுத்தல், வெளிப்படுத்திய உணர்வுகளைக் கையாளுதல் தொடர்பான பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளை உள்ளடக்கிய இச்சிறப்பு கருத்தமர்வில் 30 வரையான இளைஞர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin