இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்புவிழா ஐப்பசி மாதம் 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2023, 2024ஆம் கல்வி ஆண்டுகளில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறப்பு சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

வவுனியா தெற்கு கல்வி வலய பிரதி கல்வி பணிப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவருமான திரு. போல் அமல்ராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கிளிநொச்சி இந்து கல்லூரி அதிபரும் கல்லூரியின் பழைய மாணவருமான திரு. ஜோயல் பியசீலன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ், கல்லூரியின் கொழும்பு பழைய மாணவர் சங்க தலைவர் திரு. ஜோர்ஜ் யேசுதாசன், இளவாலை பழைய மாணவர் சங்க தலைவர் திரு. பீற்றர் பியன்வெனு ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களென பலரும் கலந்துகொண்டனர்.

 

By admin