இளவாலை புனித றீற்றம்மா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

23ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் அருட்தந்தை எட்வின்நாதன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை மொன்பேர்ட் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

 

By admin