இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி றெஜினா அவர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தை தரிசித்து அங்குள்ள வயோதிப அருட்சகோதரிகளுக்கு கலைநிகழ்வுகளை நிகழ்த்திக்காட்டியதுடன் அவர்களுக்கான அன்பளிப்புக்களையும் வழங்கினர்.

இந்நிகழ்வில் 70 மறைக்கல்வி மாணவர்களும் 15 மறையாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.

By admin