இலங்கை மற்றும் மாலைதீவிற்கான கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் திரு. எரிக் வால்ஸ் அவர்கள் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் யூலை மாதம் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்குச்சென்று அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குகொண்டுள்ளார்.

கனடா பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பின் பேரில் கல்லூரியை பார்வையிட்ட திரு. எரிக் வால்ஸ் அவர்கள் அவரின் வருகையின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல்லையும் திரைநீக்கம் செய்துவைத்தார்.

தொடர்ந்து மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் இளவாலை மறைக்கோட்ட குருக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

By admin