அண்மையில் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட இலங்கை கிளறேசியன் சபை புனித யோசேவ்வாஸ் மாநில புதிய நிர்வாகக்குழு அங்கத்தவர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தலைமை பொறுப்பாளர் அருட்தந்தை ஜோசப் ஜெயசீலன், ஆலோசகர்கள் அருட்தந்தை வின்சன் டி போல் குரூஸ், அருட்தந்தை தேவராஜன் பீரிஸ் மற்றும் அருட்தந்தை தனுஸ்க சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.