மன்னார் மறைமாவட்டம் வவுனியா, இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட பெயர் கொண்ட புனிதரின் திருவிழா 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின் தலைமையில் உதவி அதிபர் அருட்தந்தை விமல் றோய் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
தொடர்ந்து கலைநிகழ்வுகளுடன் அன்றைய நாளை சிறப்பித்து மரநடுகை நிகழ்வும் அங்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்சேநன், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களென பலரும் கலந்துகொண்டனர்.