யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “இசை நடன இரவு” நிகழ்வு 24ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி. அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியில் நுண்கலைப் பாடங்களைப் பயில்கின்ற மாணவர்களால் மெல்லிசை, கரகம், புத்தாக்க நடனம், விரலிசை நாத வந்தனம், நாட்டிய நர்த்தனம், பதம், கிராமிய சங்கமம், இராமசரிதம் நவரச கீர்த்தனம் போன்ற கலைநிகழ்வுகள் மேடையேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், மன்ற அங்கத்தவர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin