போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி லுட்வின் கிறிஸ்ரா மரியதாஸ் அவர்கள் புரட்டாதி மாதம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
1992ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றி 33 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்த இவர் உரோமில் திருக்குடும்ப கன்னியர் சபை ஆலோசகராகவும், யாழ். மாகாண தலைவியாகவும், பொருளாளராகவும், யாழ்ப்பாணம் மற்றும் தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரிகளில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
இவரின் பணிவாழ்விற்காக நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.